சுண்டைக்காய் குழம்பு


சுண்டைக்காய் குழம்பு….

தேவையானவை 

  • சுண்டைக்காய் வத்தல் –  1 மே கரண்டி
  • மிளகாய் பொடி – 1 தே கரண்டி
  • மல்லி பொடி – 2 தே கரண்டி
  • மஞ்சள் பொடி – 1/2 தே கரண்டி
  • உப்பு
  • புளி கரைசல் – 2 மே கரண்டி

தாளிக்க

  • நல்லெண்ணெய் – 2 தே கரண்டி
  • கடுகு – 1/4 தே கரண்டி
  • வெந்தயம் – 1/4 தே கரண்டி
  • கருவேப்பிலை – சிறிது 
  • சின்ன வெங்காயம் – 1 மே கரண்டி
 

செய்முறை 

  • சுண்டைக்காய் வற்றலை எண்ணையில் பொரித்து எடுத்துகொள்ளவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி அதில் தாளிக்க கொடுத்துள்ளதை சேர்த்து தாளிக்கவும்.
  • மிளகாய் தூள், மல்லி பொடி, மஞ்சள் பொடி, புளி கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். 
  • நன்கு கெட்டியானவுடன் வறுத்து  வைத்துள்ள சுண்டைக்காய் வற்றலை சேர்க்கவும்.
  • இப்போது வத்தல் குழம்பு ரெடி……

புளி கறி


புளி கறி
தேவையானவை :
தடியங்காய்(வெள்ளை பூசணிக்காய் ) / கத்திரிக்காய், முருங்கக்காய் – கிண்ணம் 
புளி கரைசல் – 100 மி. லி
தேங்காய் –  மே. கரண்டி  
மிளகாய் வற்றல் –  
சின்ன வெங்காயம் –  
மஞ்சள் பொடி – 1/2 தே. கரண்டி 
உப்பு – தேவைக்கு 
தாளிக்க :
தே. எண்ணெய் –  1 மே. கரண்டி 
கடுகு – 1/2 தே. கரண்டி
சின்ன வெங்காயம் (பொடியாக வெட்டியது ) – 1 மே. கரண்டி  
கருவேப்பிலை – சிறிது
செய்முறை :
  • காய்கறிகளை துண்டுகளாக்கி வேகவைத்துக்  கொள்ளவும்.
  • தேங்காய், மிளகாய் வற்றல், சின்ன வெங்காயம், மஞ்சள் பொடி சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும்.
  •  வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்து உள்ளதை சேர்த்து தாளிக்கவும்.
  • புளி கரைசல், வேக வைத்த காய்கள், தேங்காய் அரைப்பு, உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • லேசாக கொதித்து பொங்கி வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
குறிப்பு :
இதற்கு தொட்டு கொள்ள உருளைக்கிழங்கு கறி நன்றாக இருக்கும்.

புளி தண்ணீர்


புளி தண்ணீர்

 

தேவையானவை :
புளி கரைசல் – 200 மி. லி
மல்லி பொடி – 2 தே. கரண்டி 
மஞ்சள் பொடி – 1/2 தே. கரண்டி 
உப்பு – தேவைக்கு 

 

தாளிக்க :
நல்லெண்ணெய் –  1 மே. கரண்டி 
கடுகு – 1/2 தே. கரண்டி
கடலை பருப்பு – 1 தே. கரண்டி 
பெருங்காயம் – 1/2 தே கரண்டி 
மிளகாய் வற்றல் – 4
சீரகம் – 1/2 தே கரண்டி 
கருவேப்பிலை – சிறிது

 

செய்முறை :
வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்து உள்ளதை சேர்த்து தாளிக்கவும்.
மல்லி பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து லேசாக வதக்கவும்.
புளி கரைசலை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விடவும்.
அடுப்பில் இருந்து இறக்கி பொடியாக அரிந்த சின்ன வெங்காயத்தை சேர்க்கவும்.

 

குறிப்பு :
இதற்கு தொட்டு கொள்ள சிறு பருப்பு துவையல் நன்றாக இருக்கும்.

வெண்டைக்காய் சாம்பார்


தேவையானவை  :

துவரம் பருப்பு –  200 கிராம்

புளி – எலுமிச்சை அளவு

வெண்டைக்காய் – 4

சாம்பார் பொடி –  5 தே. கரண்டி

தாளிக்க :

கடுகு – 1 தே. கரண்டி

வெந்தயம் – 1/2  தே. கரண்டி

பெருங்காயம் சிறிதளவு

கருவேப்பிலை சிறிதளவு

உப்பு தேவைக்கு

தே. எண்ணெய் – 1 தே. கரண்டி

வெண்டைக்காய் சாம்பார்

செய்முறை : 

  • துவரம் பருப்பை வேக வைக்கவும்.
  • வெண்டைக்காயை லேசாக வதக்கி சிறிது புளி கரைசலில் வேக வைக்கவும்.
  • வெந்த பருப்பு, வெண்டைக்காய், புளிகரைசல், சாம்பார் பொடி, உப்பு இவற்றை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, வெந்தயம், பெருங்காயம், கிள்ளிய மிளகாய் வற்றல், கருவேப்பிலை போட்டு தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்.
  • சுவையான வெண்டைக்காய்  சாம்பார் ரெடி.


தீயல்


தீயல்


தேவையானவை :
காய் (முருங்கை, கத்திரி, வாழைக்காய், பூசணிக்காய் ) – 10 துண்டுகள் 
புளி கரைசல் – 1 கிண்ணம் 
ந. எண்ணெய் – 1 மே. கரண்டி 
உப்பு – சிறிதளவு 
அரைக்க :
மல்லி விதை – 1 மே. கரண்டி 
மிளகாய்  வற்றல் – 3
நல்ல மிளகு – 1 /2 தே. கரண்டி 
சின்ன வெங்காயம் – 5
தேங்காய் – 3  மே. கரண்டி 
கருவேப்பிலை – சிறிது
தாளிக்க :
கடுகு – 1 /2 தே. கரண்டி
வெந்தயம் – 1 /2 தே. கரண்டி
சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது ) – 1 /2 கிண்ணம் 
கருவேப்பிலை – சிறிது

செய்முறை :

  • முதலில் அரைக்க கொடுத்துள்ளதை வறுத்து அரைக்கவும்.
அரைத்தது
  • காய்களை வேக வைத்துக்கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளதை தாளிக்கவும்.
  • அதனுடன், புளி கரைசல், வேக வைத்துள்ள காய், அரைத்த விழுது மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • தீயல் ரெடி….
குறிப்பு :
  • மல்லி விதை அரைபடுவதற்கு சற்று நேரமாகும். அதனால் அதற்கு பதிலாக  மல்லி தூள் பயன்படுத்தலாம். வறுக்கும் போது கடைசியில் பொடியை சேர்த்து லேசாக வறுக்கவும்.
  • காய்களை சேர்த்தும் போட்டு குழம்பு வைக்கலாம் அல்லது தனி தனியாக போட்டும் வைக்கலாம்.