மாங்காய் ஊறுகாய்


மாங்காய் ஊறுகாய் 

12509118_10209030767112819_4492431078640752586_n

மாதா ஊட்டாத சோறை மாங்காய் ஊட்டும்ன்னு சொல்லுவாங்க. சாதம், குழம்பு எதுவாக இருந்தாலும்  மாங்காய் ஊறுகாய் ஓன்று போதும்.

தேவையானவை :

மாங்காய் – 1

பச்சை மிளகாய் – 2

மிளகாய் பொடி – 2 தே கரண்டி 

மஞ்சள் தூள் – 1/4 தே கரண்டி

உப்பு தேவைக்கு

பெருங்காயப் பொடி – 1/4 தே கரண்டி

தாளிக்க தேங்காயெண்ணெய் – 2 தே கரண்டி

கருவேப்பிலை – சிறிதளவு

கடுகு – 1/4 தே கரண்டி

வெந்தயம் – 1/4 தே கரண்டி

 

செய்முறை :

  • மாங்காயை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  • பச்சை மிளகாயையும் சிறிதாய் அரிந்துக் கொள்ளவும்.  
  • உப்பு, காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கரண்டியால் விரவி வைக்கவும். மிளகாய் தூள் மட்டும் மாகாயின் புளிப்புக்கு ஏற்ப சேர்க்கவும். மாங்காய் அதிகம் புளித்திருந்தால், மிளகாய் தூள் சற்று அதிகம் போடவும். புளிப்பு குறைவாக இருந்தால், அதையும் குறைத்துக் கொள்ளலாம்.
  • ஒரு பத்து நிமிடமாவது இந்த கலவை ஊறவேண்டும். அப்போதுதான் அந்த உப்பு கரையும்.  
  • வாணலியை அடுப்பில் வைத்து தாளிக்க கொடுத்துள்ளவற்றை போட்டு தாளிக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு அதில் இந்த மாங்காய் கலவையை கொட்டி இளம் சூட்டில் கலந்து இறக்கவும். 
  • இனி ஆறியவுடன் எடுத்து பிரிஜில் வைத்துக்கொள்ளலாம். ஒரு நான்கு நாட்கள் அப்படியே இருக்கும். 
  • தயிர் சாதத்திற்கு உகந்தது. 

 

 

giphy1

வரகு புலவு


வரகு புலவு 

SAM_8964

சிறு தானியங்களான கம்பு, சோளம், வரகு, சாமை, கேழ்வரகு முதலியன உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நார்ச்சத்து, புரதச் சத்து, தாது உப்புகள், இரும்பு கால்சியம் முதலியவை இவற்றில் நிறைந்து காணப்படும். இங்கு வரகை வைத்து சமையல் செய்வது குறித்துப் பார்ப்போம்.

வரகு புலவு :

தேவையானவை :

வரகு அரிசி – 200 கிராம்

நறுக்கிய காய்கறிகள் (காரட், பீன்ஸ், பட்டாணி, குடை மிளகாய்) – 100 கிராம் 

உப்பு தேவைக்கு 

கரம் மசாலா பொடி – 1/4 தே.கரண்டி 

மிளகாய் பொடி – 1 தே. கரண்டி 

தண்ணீர் – 400 மிலி 

தாளிக்க :

பட்டை, அன்னாசி பூ, பிரியாணி இலை, கிராம்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, எண்ணெய் 

செய்முறை :

வரகு அரிசியை கழுவி நனைத்து வைக்கவும்.

பெரிய வாணலியை அடுப்பில் வைத்து, தாளிக்க உள்ளவற்றை ஒவ்வொன்றாய் போட்டு வதக்கவும்.

SAM_8952

SAM_8953

வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய காய்களைச் சேர்த்து பிரட்டவும்.

SAM_8954

SAM_8956

அரிசியை சேர்த்து, பிரட்டவும்.

SAM_8957

தண்ணீர் சேர்க்கவும்.  ( ஒரு கப்புக்கு இரண்டு கப்பு என்ற விகிதத்தில் ).

SAM_8960

மூடி வேக வைக்கவும். 

குக்கரில் வேக வைக்க வேண்டுமானால், சற்று தண்ணீரைக் குறைத்துக் கொள்ளலாம். இரண்டு விசிலுடன் இறக்கிவிடவும்.  

கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

வரகு புலவு ரெடி.

SAM_8966

மரவள்ளி கிழங்கு கறி


மரவள்ளிகிழங்கு

மரவள்ளிகிழங்கு என்பது நமது தென் இந்தியாவின், முக்கியமாக கேரளாவின் பிரதான உணவு. அவர்கள் அதை மீன் கறியுடன் கூட்டாய் வைத்து உண்ணுவார்கள். 

கிழங்கில் மாவுசத்து மட்டுமே உள்ளது. அதனால் அது ஜீரணிக்க அதிக நேரம் எடுப்பதில்லை. 

கிழங்கு கறி 

kilangucurry (1)

தேவையானவை :

மரவள்ளிக்கிழங்கு – 1/2 கிலோ 

உப்பு தேவைக்கு

தே. எண்ணெய் – 2 மே. கரண்டி 

tumblr_n7fghqmkn81tedlifo6_r1_500

அரைக்க : 

தேங்காய் – 3 மே. கரண்டி

மிளகாய் வற்றல் – 1

மஞ்சள் பொடி – 1/2 தே கரண்டி

வெள்ளை பூண்டு – 2 

கருவேப்பிலை  சிறிது 

8TE6EMkjc

தாளிக்க : 

தாளித்தல் கிடையாது. முடிக்கும் போது தேங்காய் எண்ணெய் மற்றும் கருவேப்பிலை பிய்த்து போட்டு இறக்கவும். 

செய்முறை :

Organic_Tapioca_Starch1

Tapioca2

  1. அரைக்கக் கொடுத்துள்ளவைகளை அரைத்துக் கொள்ளவும். ரொம்ப கரகரப்பாகவும் இல்லாமல், மையாகவும் இல்லாமல் அரைக்கவும்.
  2. கிழங்கை பொடியாக வெட்டி, நன்கு வேக வைக்கவும்.
  3. முக்கால் பாகம் வெந்ததும், உப்பு சேர்க்கவும்.
  4. அரைத்ததை சேர்த்து, ஐந்து நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்.
  5. தேங்காய் எண்ணெய்யும் கருவேப்பிலையும் சேர்த்து இறக்கிவிடவும். 
  6. சுவையான கிழங்கு கறி தயார். 

kilangucurry (3)

இஞ்சி சாதம்


இஞ்சி சாதம் 

SAM_6989

 

வீட்டில் இஞ்சி நிறைய இருந்தால், இஞ்சி சாதம் செய்யலாம். நானும் அப்படிதான் ஆரம்பித்தேன்.

இஞ்சியை தோலுரித்து, சிறு துண்டுகளாக்கி, மிக்சியில் சதைத்துக் கொள்ளவும்.

SAM_6985

கிராம்பு, பட்டை, அன்னாசி பூ, இலவங்கப் பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய் 

SAM_6978

 

இரண்டு பச்சை மிளகாயை நீளமாய் கீறிக் கொள்ளவும்..

SAM_6979

மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா 

SAM_6981

பாசுமதி அரிசி அல்லது கிச்சடி சம்பா அரிசியை நனைத்து வைத்துக் கொள்ளவும்.

SAM_6984

மைக்ரோவேவ் அவனில் (Oven) ஒரு கண்ணாடி பவுலில் எண்ணெய் ஊற்றி, ஒரு நிமிடம் சூடு பண்ணி, அதனுடன் பட்டை, லவங்கம், அன்னாசி பூ, இலை, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி  எல்லாம் சேர்த்து 2 mins வைத்து எடுக்கவும். 

SAM_6986

பிறகு அதனுடன் அரிசி, மிளகாய் பொடி, கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் ஒரு அளவு அரிசிக்கு இரண்டு அளவு தண்ணீர் சேர்த்து oven யில் 20 mins வைக்கவும்.

இடையில் ஓரிரு முறை கிளறிக் கொடுக்கவும்.

இஞ்சி சாதம் ரெடி

SAM_6990

giphy1

சுண்டைக்காய் குழம்பு


சுண்டைக்காய் குழம்பு….

தேவையானவை 

  • சுண்டைக்காய் வத்தல் –  1 மே கரண்டி
  • மிளகாய் பொடி – 1 தே கரண்டி
  • மல்லி பொடி – 2 தே கரண்டி
  • மஞ்சள் பொடி – 1/2 தே கரண்டி
  • உப்பு
  • புளி கரைசல் – 2 மே கரண்டி

தாளிக்க

  • நல்லெண்ணெய் – 2 தே கரண்டி
  • கடுகு – 1/4 தே கரண்டி
  • வெந்தயம் – 1/4 தே கரண்டி
  • கருவேப்பிலை – சிறிது 
  • சின்ன வெங்காயம் – 1 மே கரண்டி
 

செய்முறை 

  • சுண்டைக்காய் வற்றலை எண்ணையில் பொரித்து எடுத்துகொள்ளவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி அதில் தாளிக்க கொடுத்துள்ளதை சேர்த்து தாளிக்கவும்.
  • மிளகாய் தூள், மல்லி பொடி, மஞ்சள் பொடி, புளி கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். 
  • நன்கு கெட்டியானவுடன் வறுத்து  வைத்துள்ள சுண்டைக்காய் வற்றலை சேர்க்கவும்.
  • இப்போது வத்தல் குழம்பு ரெடி……