
தேவையானவை :
பச்சரிசி அல்லது பொன்னி புழுங்கல் அரிசி – 1 உழக்கு
எலுமிச்சை பழம் – 1
மிளகாய் வற்றல் – 3
பச்சை மிளகாய் – 2
கருவேப்பில்லை சிறிதளவு
இஞ்சி (விருப்பபட்டால்) – 1 துண்டு
பெருங்காயம் – 1 தே. கரண்டி
கடுகு – 1 தே. கரண்டி
கடலை பருப்பு – 1 தே. கரண்டி
உப்பு சிறிதளவு
மஞ்சள் போடி – 1/2 தே. கரண்டி
செய்முறை :
- அரிசியை முக்கால் பதமாக வேகவைத்து எடுத்து வைக்கவும்.
- எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுக்கவும்.
- அதனுடன் உப்பும் சிறிது மஞ்சள் பொடியும் சேர்க்கவும்.
- வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, கடலை பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து எலுமிச்சை சாற்றுடன் ஊற்றவும்.
- சாதத்துடன் இதை கலந்து வைக்கவும்.