உளுந்தம் சாதம்


உளுந்தம் சாதம் 

sam_5278

உளுந்தம் பருப்பு 

sam_5248

உந்தூழ் என்பது உழுந்தைக் குறிக்க சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட சொல். உந்தூழ் என்பது வெடித்துச் சிதறி விதை பரப்பும் செடியினம். உந்துதல் என்பது எம்பிக் குதித்தல்.

உந்தூழ்ப் பூவைக் குறிஞ்சிப்பாட்டு “உரி நாறு அமிழ்து ஒத்து உந்தூழ்” என விளக்குகிறது. உரி நாறல் = தோல் வெடித்து நாற்று ஆதல் அமிழ்து ஒத்து = அமிழ்தம் ஒத்தது உழுந்து வெடித்துச் சிதறி விதை விழுந்து முளைக்கும். உணவுப் பயறு வகைகளில் உழுந்து அமிழ்தம் ஒத்தது. எனவே உந்தூழ் என்னும் உழுந்து மிகப் பொருத்தமான, தெளிவுபடுத்தும் திறன் கொண்ட அடைமொழியுடன் இங்குக் கூறப்பட்டுள்ளதை உணரமுடிகிறது. (நன்றி : விக்கி )

உளுந்தின் பயன்கள் :

  • பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் நீங்க உதவுகிறது.
  • பெண்களின் இடுப்பு வலிமை பெறவும் குழந்தை பெற்ற பெண்ணுக்கு பால் சுரப்பை அதிகமாக்கவும் பயன்படுகிறது.
  • இரத்தத்துல கொலஸ்ட்ரால் அளவ குறைச்சு இதயத்த பலப்படுத்துது.
  • கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.
  • முளைகட்டிய உளுந்து நீரிழிவுக்கு நல்லது

உளுந்தம் சாதம் 

 

sam_5278

உடைத்த உளுந்து கொண்டு சோறு ஆக்குவது உடலுக்கு மிக நல்லது. அரிசி, உளுந்து, தேங்காய், மிளகாய் வற்றல், வெள்ளை பூண்டு, சீரகம் ஒன்றாய் சேர்த்து செய்வதால் சத்தானதும் கூட. 

பெரும்பாலும் பச்சரிசி தான் உபயோகிப்பது வழக்கம். புழுங்கல்அரிசியும் பயன்படுத்தலாம். 

 

தேவையானவை :

பச்சரிசி – 200 gm அல்லது 1 கப் 

கருப்பு உளுந்து (உடைத்தது) – 100 gm  அல்லது 1/2 கப் 

தேங்காய் – 2 மே. கரண்டி 

வெள்ளை பூண்டு – 4

சீரகம் – 1/2 தே கரண்டி 

வெந்தயம் – 1/4 தி கரண்டி 

உப்பு தேவைக்கு 

 

தாளிக்க :

கடுகு – 1/2 தே கரண்டி 

மிளகாய் வற்றல் – 3

காயம் – 1/2 தே கரண்டி 

கருவேப்பிலை – கொஞ்சம்

 

செய்முறை :

உடைத்த கருப்பு உளுந்தை நன்கு சிவக்க வறுக்கவும். சரியாக வறுபடாவிட்டால் பச்சை வாசம் போகாது. 

sam_5250

அரிசியையும் கை சூடு பொறுக்கும் அளவுக்கு சிறிது வறுத்து கொள்ளவும்.

sam_5251

இரண்டையும் நன்கு கழுவிக்கொள்ளவும். 

sam_5254

பூண்டு மற்றும் வெந்தயம், சீரகம் இவற்றையும் இலேசாக வறுத்து கழுவி வைத்துள்ள கலவையுடன் சேர்க்கவும். 

sam_5259

தேங்காயை நிறம் மாறாமல் வறுத்து அதில் சேர்க்கவும். 

sam_5260

உப்பு சேர்க்கவும். 

ஒரு கப்புக்கு 3 கப் தண்ணீர் சேர்க்கவும். நாம் போட்டிருக்கும்  1  1/2 கப்புக்கு 5 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். 

sam_5262

ஒரு கொதி வந்ததும் தீயைக் குறைத்து வேக வைத்து எடுக்கவும். 

தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சாதத்துடன் கலக்கவும்.  

sam_5275

 

தொட்டு கொள்ள :

உளுந்தம் சாதத்துடன் தொட்டு கொண்டு சாப்பிட மல்லித்துவையல் நன்றாக இருக்கும். செய்முறை இங்கே.

sam_5286

கோவக்காய் பொரியல்


கோவக்காய் 

(Ivy Gourd)

கோவக்காய் ஆசியா, ஆப்பிரிகா, அமெரிக்கா போன்ற நாடுகளில் விளைகிறது. வெள்ளரியைப்போல் தோற்றம் உடையது. ஆனால் அதைவிட  அளவில் சிறியது.

KovaikaaiCurry (1)

நன்மைகள் :

இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடிகிறது. உடல் அயர்ச்சியைத் தடுக்கிறது. தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்குகிறது. சிறுநீரக கற்கள் வருவதை தடுக்கிறது. 

 

கோவக்காய் பொரியல் 

KovaikaaiCurry (7)

தேவைப்படும் நேரம் : 30 நிமிடம் 

செய்முறை :

  • முதலில் சின்ன வெங்காயத்தை பத்து எடுத்து,  சிறிதாக அரிந்துக்கொள்ளவும்.
  •  தக்காளியையும் பொடியாக வெட்டிக்கொள்ளவும்.
  • கோவக்காயை நன்றாக கழுவி, வட்டம் வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காய் ஒரு மேஜை கரண்டி அளவு துருவிக் கொள்ளவும். 

KovaikaaiCurry (27)

  • தாளிக்கும் கடாயையை அடுப்பில் ஏற்றவும்.
  • எண்ணெய் ஊற்றி, கடுகு, வெங்காயம் போட்டு வதக்கவும்.  

KovaikaaiCurry (19)

KovaikaaiCurry (18)

 

 

  • கோவக்காயை சேர்த்து வதக்கவும். 

KovaikaaiCurry (17)

 

  • அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.

KovaikaaiCurry (15)

 

  • மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி சேர்க்கவும்.
  • மிளகாய் பொடி அல்லது சாம்பார் பொடி 2 தேக்காரண்டி சேர்க்கவும்.
  • மல்லி தூள் 2 தேக்கரண்டி சேர்க்கவும். உப்பும் சேர்க்கவும்.

KovaikaaiCurry (14)

 

KovaikaaiCurry (13)

 

  • நன்றாக வதக்கவும். 

KovaikaaiCurry (10)

 

 

  • சிறிது தண்ணீர் சேர்த்து காய் வேகும் வரை அடுப்பில் வைக்கவும்.

KovaikaaiCurry (9)

 

 

  • தேங்காய் துருவல், கருவேப்பிலை கடைசியில் சேர்த்து இறக்கவும்.

SAM_2331

 

  • சுவையான கோவக்காய் பொரியல்  ரெடி. எந்த சாப்பாட்டுடனும் எடுத்துக்கொள்ளலாம்.

SAM_2333

 

KovaikaaiCurry (6)

 

8TE6EMkjc

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

புளி கறி


புளி கறி
தேவையானவை :
தடியங்காய்(வெள்ளை பூசணிக்காய் ) / கத்திரிக்காய், முருங்கக்காய் – கிண்ணம் 
புளி கரைசல் – 100 மி. லி
தேங்காய் –  மே. கரண்டி  
மிளகாய் வற்றல் –  
சின்ன வெங்காயம் –  
மஞ்சள் பொடி – 1/2 தே. கரண்டி 
உப்பு – தேவைக்கு 
தாளிக்க :
தே. எண்ணெய் –  1 மே. கரண்டி 
கடுகு – 1/2 தே. கரண்டி
சின்ன வெங்காயம் (பொடியாக வெட்டியது ) – 1 மே. கரண்டி  
கருவேப்பிலை – சிறிது
செய்முறை :
  • காய்கறிகளை துண்டுகளாக்கி வேகவைத்துக்  கொள்ளவும்.
  • தேங்காய், மிளகாய் வற்றல், சின்ன வெங்காயம், மஞ்சள் பொடி சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும்.
  •  வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்து உள்ளதை சேர்த்து தாளிக்கவும்.
  • புளி கரைசல், வேக வைத்த காய்கள், தேங்காய் அரைப்பு, உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • லேசாக கொதித்து பொங்கி வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
குறிப்பு :
இதற்கு தொட்டு கொள்ள உருளைக்கிழங்கு கறி நன்றாக இருக்கும்.

தக்காளி சாதமும் தயிர் வெண்டைக்காயும்


தக்காளி சாதம் :

தக்காளி சாதம்

முதலில் சீரக சம்பா அரிசி அல்லது பிரியாணி அரிசி ( 200 கிராம்) எடுத்து முக்கால் பதத்திற்கு வேக வைத்து எடுக்கவும்.

தக்காளி (2), பெரிய வெங்காயம் ( 1), இஞ்சி (1 சிறிய துண்டு ), பச்சை மிளகாய் (4 இரண்டாக கீறவும்)  சிறு துண்டுகளாக நறுக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் / ரீபைன்ட் எண்ணெய் ( 2 தே. கரண்டி ) ஊற்றி பட்டை (2 ),  லவங்கம் (2 ),  பிரிஞ்சி இலை (1), ஏலக்காய் (2),   கிராம்பு (2),   கடலை பருப்பு (1/2 தே கரண்டி ),   பெருங்காயம் (1/2  தே கரண்டி ),    கிள்ளிய  மிளகாய் வற்றல் (2),  கருவேப்பிலை (1 கொத்து ), கடுகு (1/2  தே கரண்டி ) சேர்த்து வதக்கவும்.

நறுக்கிய தக்காளி, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து தக்காளி நன்கு குழையும் வரை பிரட்டவும்.

மஞ்சள் பொடியும், உப்பும் சேர்த்து கொத்தமல்லி தழை கிள்ளி போட்டு இறக்கவும்.

தக்காளி மசாலா

இதை சாதத்துடன் போட்டு கிளறி வைக்கவும்.

தக்காளி சாதம் ready….

தயிர் வெண்டைக்காய் :

தயிர் வெண்டைக்காய்

வெண்டைக்காயை 1/2 இன்ச் அளவிலான துண்டுகளாக நறுக்கி சற்று வாட வைக்கவும்.

தயிரில் பச்சை மிளகாய் (2) கீறி போடவும். கொத்தமல்லி தழை , உப்பு சிறிது சேர்க்கவும்.

வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் உளுந்து, கடுகு தாளித்து, பெருங்காயம் , கருவேப்பிலை போட்டு தயிருடன் கலக்கவும்.

வெண்டைக்காயை எண்ணையில் வறுத்து எடுக்கவும். எண்ணெய் ஊறிஞ்சும் காகிதத்தில் வைத்து எண்ணையில்லாமல் தயிரில் கலக்கவும். பரிமாறுவதற்கு சற்று முன் வெண்டைக்காயை தயிருடன் சேர்க்கவும். அப்போதுதான் பொரு பொருப்புடன் இருக்கும்.

தயிர் வெண்டைக்காய் ready….

பாகற்காய் பிட்லை


பாகற்காய் பிட்லை
தேவையான பொருட்கள் :
பாகற்காய் –  200 கிராம் 
புளி கரைசல் –  100 மி. லி 
உப்பு – சிறிது 
கருவேப்பிலை – சிறிது 
தேங்காய் – 1 மே. கரண்டி 
மஞ்சள் தூள் – 1/2  தே. கரண்டி 

 

வறுத்து அரைக்க :
மல்லி விதை – 1 தே. கரண்டி 
நல்ல மிளகு –  1/2 தே. கரண்டி 
மிளகாய் வற்றல் – 3 
கடலை பருப்பு – 1 தே. கரண்டி 
உளுந்தம் பருப்பு – 1/2 தே. கரண்டி 

 

தாளிக்க :
கடுகு – 1/2 தே. கரண்டி 
எண்ணெய் – 1 தே. கரண்டி 

 

செய்முறை :
  • அரைக்க கொடுத்துள்ளதை தனி தனியாக வறுத்து தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும்.
  • பாகற்காயை மெல்லிய  வட்டங்களாக வெட்டி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
  • பாதி வெந்தவுடன் புளி கரைசல், அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விடவும்.
  • கடுகு மட்டும் தாளித்து விடவும்.
  • அடுப்பிலிருந்து இறக்கும் போது கருவேப்பிலை கிள்ளி போடவும்.
  • பிட்லை தயார்.