மரவள்ளி கிழங்கு கறி

மரவள்ளிகிழங்கு

மரவள்ளிகிழங்கு என்பது நமது தென் இந்தியாவின், முக்கியமாக கேரளாவின் பிரதான உணவு. அவர்கள் அதை மீன் கறியுடன் கூட்டாய் வைத்து உண்ணுவார்கள். 

கிழங்கில் மாவுசத்து மட்டுமே உள்ளது. அதனால் அது ஜீரணிக்க அதிக நேரம் எடுப்பதில்லை. 

கிழங்கு கறி 

kilangucurry (1)

தேவையானவை :

மரவள்ளிக்கிழங்கு – 1/2 கிலோ 

உப்பு தேவைக்கு

தே. எண்ணெய் – 2 மே. கரண்டி 

tumblr_n7fghqmkn81tedlifo6_r1_500

அரைக்க : 

தேங்காய் – 3 மே. கரண்டி

மிளகாய் வற்றல் – 1

மஞ்சள் பொடி – 1/2 தே கரண்டி

வெள்ளை பூண்டு – 2 

கருவேப்பிலை  சிறிது 

8TE6EMkjc

தாளிக்க : 

தாளித்தல் கிடையாது. முடிக்கும் போது தேங்காய் எண்ணெய் மற்றும் கருவேப்பிலை பிய்த்து போட்டு இறக்கவும். 

செய்முறை :

Organic_Tapioca_Starch1

Tapioca2

  1. அரைக்கக் கொடுத்துள்ளவைகளை அரைத்துக் கொள்ளவும். ரொம்ப கரகரப்பாகவும் இல்லாமல், மையாகவும் இல்லாமல் அரைக்கவும்.
  2. கிழங்கை பொடியாக வெட்டி, நன்கு வேக வைக்கவும்.
  3. முக்கால் பாகம் வெந்ததும், உப்பு சேர்க்கவும்.
  4. அரைத்ததை சேர்த்து, ஐந்து நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்.
  5. தேங்காய் எண்ணெய்யும் கருவேப்பிலையும் சேர்த்து இறக்கிவிடவும். 
  6. சுவையான கிழங்கு கறி தயார். 

kilangucurry (3)

2 Replies to “மரவள்ளி கிழங்கு கறி”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: