தேவையானவை :
- புழுங்கல் அரிசி – 250 கிராம்
- துவரம் பருப்பு – 100 கிராம்
- கீரை – 1 கிண்ணம் (ஏதாவது ஒரு கீரை – முருங்கை , சுகிட்டி, அரை கீரை )
- உப்பு – தேவையான அளவு
- சாம்பார் பொடி – 3 தே. கரண்டி
- புளி கரைசல் – 1 கிண்ணம்
- தேங்காய் எண்ணெய் – 1 மே. கரண்டி
- கடுகு – 1 தே. கரண்டி
- பெருங்காயம் – 1 தே. கரண்டி
- கடலை பருப்பு – 1 தே. கரண்டி
- கருவேப்பிலை – சிறிது
அரைக்க :
- தேங்காய் – 2 மே. கரண்டி
- சீரகம் – 1 தே. கரண்டி

செய்முறை :
- அணைத்தையும் கலந்து மைக்ரோவேவ் அவனில்(microwave oven) வைக்கும் கண்ணாடி பாத்திரத்தில்( Glass Bowl) வைக்கவும்.
- தண்ணீர் ( 1 பங்கு அரிசிக்கு 3 பங்கு தண்ணீர், புளி கரைசலையும் சேர்த்து ) அளவாக சேர்க்கவும்.
- இன்னொரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு, அவனில் ஒரு நிமிடம் வைத்து சூடாக்கி, அதில் கடுகு , கடலை பருப்பு, பெருங்காயம் , மிளகாய் வற்றல் , கருவேப்பிலை சிறிது போட்டு மூடி இரண்டு நிமிடம் அவனில் வைத்து தாளித்து எல்லாம் கலந்து வைத்திருக்கும் பாத்திரத்தில் சேர்க்கவும்.
- Oven – Temperature – 600 degree ; Time – 30 minutes வைத்து வேக வைக்கவும்
- இடையில் ஒரு தடவை எடுத்து கலக்கி விடவும்.
- Time முடிந்தவுடன் oven யை off பண்ணிவிட்டு, ஒரு 5 நிமிடம் சாதத்தை உள்ளே வைத்துவிட்டு பிறகு எடுக்கவும்.
- கீரை – பருப்பு சாதம் ரெடி.