தேவையானவை :
புழுங்கல் அரிசி – 100 மி. லி.
பால் – 200 மி.லி.
சர்க்கரை (சீனி) – தேவையான அளவு
நல்ல மிளகு – 1 தே. கரண்டி
சீரகம் – 1 தே. கரண்டி
மஞ்சள் பொடி – 1/2 தே. கரண்டி
பூண்டு – 3 பல்


செய்முறை :
- அரிசியுடன் பாலை கலந்து வேக வைக்கவும். தேவைபட்டால் சிறிது பாலோ அல்லது தண்ணீரோ சேர்த்து கொள்ளவும்.
- அரிசி நன்றாக வெந்தவுடன், நல்ல மிளகு, சீரகம், பூண்டு போன்றவற்றை ஒன்றிரண்டாக பொடித்து கஞ்சியுடன் சேர்க்கவும்.
- கடைசியில் தேவைபட்டால் மஞ்சள் பொடியை சேர்க்கவும்.
- சர்க்கரை சேர்த்து இனிப்பு கஞ்சியாக சாப்பிடலாம்.
குறிப்பு :
- பால் கஞ்சியை கொதிக்க வைக்கும் போது, சற்று தீயை குறைத்து வைக்கவும். இல்லையென்றால் பால் திரிந்துவிடும் .
- குழந்தைகளுக்கு ஜலதோஷம், இருமல் போன்றவை இருந்தால் மஞ்சள் பொடி சேர்த்து கொடுத்தால் இருமல் குறையும்.
very nice to tease it