தேவையானவை :
துவரம் பருப்பு – 200 கிராம்
புளி – எலுமிச்சை அளவு
முருங்கை காய் – 1
கத்திரிக்காய் – 3
உருளை கிழங்கு – 2
பூசணி காய் – சிறிய துண்டு
வெண்டைக்காய் (தேவையானால்) – 4
சாம்பார் பொடி – 5 தே. கரண்டி
கடுகு – 1 தே. கரண்டி
வெந்தயம் – 1/2 தே. கரண்டி
பெருங்காயம் சிறிதளவு
கருவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவைக்கு
தே. எண்ணெய் – 1 தே. கரண்டி

செய்முறை :
- துவரம் பருப்பை வேக வைக்கவும்.
- காய்கறிகளை தனியாக வேக வைக்கவும்.
- புளியை கரைத்துக் கொள்ளவும்.
- வெந்த பருப்பு, காய், புளிகரைசல், சாம்பார் பொடி, உப்பு இவற்றை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- வானலியில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, வெந்தயம், பெருங்காயம், கிள்ளிய மிளகாய் வற்றல், கருவேப்பிலை போட்டு தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்.
- சுவையான சாம்பார் ரெடி.
குறிப்பு :
காய்களை வேகவைக்கும் போது, பூசணிக் காயை கடைசியில் சேர்க்கவும். இல்லையென்றால் குழைந்து விடும். அதே போல் வெண்டைக்காயை லேசாக வதக்கி கடைசியில் சேர்க்கவும்.