
தேவையானவை
வடை பருப்பு – 200 கிராம் (1 உழக்கு )
மிளகாய் வற்றல் – 3
நறுக்கிய கருவேப்பில்லை சிறிதளவு
பெருங்காயம் – 1 தே. கரண்டி
நறுக்கிய சின்ன வெங்காயம் – 1 கிண்ணம்
உப்பு சிறிதளவு
செய்முறை :
- வடை பருப்பு, மிளகாய் வற்றல் இரண்டையும் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- தண்ணீரை சுத்தமாக வடித்து, அதனுடன் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
- பொடியாக நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, விருப்பபட்டால் சிறிது கொத்தமல்லி தழை சேர்க்கவும்.
- சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவைத்து, அதில் உருண்டைகளை வடையாக (தட்டையாக) தட்டி போடவும்.
- இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
2 Replies to “பருப்பு வடை”