தேவையானவை
பச்சரிசி அல்லது பொன்னி புழுங்கல் அரிசி – 1 உழக்கு
புளி – 1 எலுமிச்சை அளவு
மிளகாய் வற்றல் – 3
கருவேப்பில்லை சிறிதளவு
பெருங்காயம் – 1 தே. கரண்டி
கடுகு – 1 தே. கரண்டி
கடலை பருப்பு – 1 தே. கரண்டி
உப்பு சிறிதளவு
மஞ்சள் போடி – 1/2 தே. கரண்டி
வறுத்து அரைக்க
மல்லி விதை – தே, கரண்டி
மிளகாய் வற்றல் – 2
கடலை பருப்பு – 1 தே, கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/2 தே, கரண்டி
செய்முறை :
- அரிசியை முக்கால் பதமாக வேகவைத்து எடுத்து வைக்கவும்.
- புளியை கரைத்து கொள்ளவும்.
- வறுத்து அரைத்த பொடியை அதனுடன் கலக்கவும்.
- அதனுடன் உப்பும் சிறிது மஞ்சள் பொடியும் சேர்க்கவும்.
- வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, கடலை பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கலந்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
- புளியோதிரை கரைசல் தயார்.
- சாதத்துடன் இதை கலந்து சாப்பிடவும்.