தேவையானவை :
புழுங்கல் அரிசி – 250 கிராம்
துவரம் பருப்பு – 100 கிராம்
காய்கள் – 1 கிண்ணம்
முருங்கை கீரை – 1 கிண்ணம்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – 1 மே. கரண்டி
கடுகு – 1 தே. கரண்டி
பெருங்காயம் – 1 தே. கரண்டி
கடலை பருப்பு – 1 தே. கரண்டி
கருவேப்பிலை – சிறிது
அரைக்க :
தேங்காய் – 2 மே. கரண்டி
மிளகாய் வற்றல் – 3
மஞ்சள் பொடி – 1 தே. கரண்டி
நல்ல மிளகு – 1 தே. கரண்டி
சீரகம் – 1 தே. கரண்டி
புளி – 1 எலுமிச்சை அளவு
கருவேப்பிலை – சிறிது
செய்முறை :
முதலில் துவரம் பருப்பை வேக விடவும்.
பாதி வெந்தவுடன் புழுங்கல் அரிசி பொடியாக வெட்டிய காய்கள் ( முருங்ககாய் – 1 , கத்திரிக்காய் – 3 , வாழைக்காய் – 1 , புடலங்காய் – சிறியது 1 , பட்டை அவரைக்காய் – 100 கிராம்) ,
அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு சிறிதளவு ,முருங்கக்கீரை ,தண்ணீர் ( 800 மி.லி. ) எல்லாம் சேர்த்து வேகவிடவும்.
ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை குறைத்து சுமார் 15 நிமிடம் வேகவிடவும். சாதம் வெந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு , அதில்கடுகு , கடலை பருப்பு, பெருங்காயம் , மிளகாய் வற்றல் , கருவேப்பிலை சிறிது போட்டு தாளித்து சாதத்தில் விடவும்.
கூட்டாஞ்சோறு மணம் உங்களை சாப்பிட அழைக்கும்.